கேப்டன்விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், 'இன்னிசை அளபெடை'-யை எளிதாகக்காணலாம் (இன்னிசை அளபெடை என்பது செய்யுளை இனிமையாக இசைப்பதற்காக ஒத்த இசையெழுத்து கூட்டி எழுதப்படுவது Source:wikipedia)
இந்த சினிமாப்பாடலை பாருங்களேன் ("பூந்தோட்ட காவல்காரன்"):
யார் 'சுகாதாரம்' என்ற சொல்லை 'சுத்தம்' என மொழிபெயர்த்தார்கள் தெரியவில்லை. எனக்கென்னமோ 'சுகாதாரம்' ஒரு 'அட்ஜெக்ட்டிவ்(adjective)' போல் தோன்றுகிறது. 'சுகம் + 'ஆதாரம்' (source of ease/happiness) என்பது எப்படி 'சுத்தத்திற்கு' சமமாக பொருள்கொண்டிருக்கமுடியும் என்று 'சுத்தமாக' புரியவில்லை!
'சுத்தமே சுகாதாரம்' என்பது 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது போன்று சொல்லப்பட்டிருந்து, காலப்போக்கில் இரண்டிற்கும் பொருள் ஒன்றுதான் என்றாகிவிட்டது போல!
'வீட்டை நாட்டை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவேண்டும்' என்ற வாக்கியம் சரியானது தான்; அதை 'சுத்தம்' என்று பொருள்கொண்டாலும் சரி, 'நிம்மதி' என நினைத்துக்கொண்டாலும் சரி! உங்கள் விருப்பம்!
என் மகளிடம் வீட்டிலிருக்கும் புத்தகங்களை பற்றி கூறுகையில், "இந்த புத்தகம் உனக்கு அண்ணன், அந்த புத்தகம் பெரியப்பா" என வேடிக்கையாக சொல்வது வழக்கம். சில நூல்கள் கல்லூரியில் படித்த பொழுது வாங்கியவை. அவ்வளவு நாட்கள் படிக்காமல் வைத்திருக்கிறோமே என ஆதங்கப்பட்டுக்கொள்ள! எல்லாம் ஒரு வேடிக்கைக்காகத்தான்.
புத்தகங்கள் தாண்டி, பின்னர் 'ஓவியத்தூரிகை, கணினி, திரைப்படங்கள்', என பிற அரூப அஃற்றினை பொருட்களுக்கும் 'வயதைப்'பொருத்தி பார்க்கும் பழக்கம் தொற்றிக்கொண்டது.
பேருந்தில் காணக்கிடைத்த குறள் ஒன்று :
"இன்னா செய்தாரை எளிதாகப் போல் வினைத்தெய்வம்
வாழ்வாகப் பூசித் துணை."
மூளைப்புயல்(brainstorm) உருவாகியது! தமிழின் வயது ஒருபுறம் இருக்கட்டும். இந்த 'வாழ்வு' என்ற சொல்லின் வயது என்ன? 2000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமா? ஒரு நாளில் எத்தனை தடவைக்குமேல் இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றோம். 'அவனுக்கு வந்த வாழ்வை பாரு', 'வாழ்வுதான்’ என.
திருக்குறள்க்கு முந்தைய எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு முதலான நூல்களிலும் 'வாழ்' மட்டுமன்றி பல 'வயதற்ற'(ageless?) சொற்கள் காணப்படுகின்றன. எல்லோரும் ‘வாழ்த்த வயதில்லை’ என்பார்கள். ஆனால், 'வாழ்'விற்கு தான் (மற்றும் பிற தமிழ் சொற்களுக்கும்) வயதில்லை!
நான் புத்திசாலித்தனமாய், "என்ன சம்பந்தமே இல்லாமல், முருகதாஸ் 'கண்டாங்கி, கண்டாங்கி' பாட்டை இங்க வச்சிருக்கார்?"
முறைத்துப்பார்த்த மனைவி,"நல்லா பாருங்க! இது சன் ம்யூசிக். ஜில்லா பட பாட்டு! விளம்பர இடைவெளியின் போது மாத்திட்டேன்"
* * * * * * * * *
சென்னை 'செல்ஃபி' மெட்ரோ
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலானோர், 'செல்ஃபி புள்ள' !எடுத்துத்தள்ளிவிடுகிறார்கள்! அதில் ஒரு சிறுவன், ரயில் பெட்டிகளின் இன்டீரியரை மட்டும் வளைச்சு வளைச்சு எடுத்துக்கொண்டிருந்தான். எதிர்காலத்தில், ரயில் பெட்டிகளை டிசைன் டிசைனா செய்வான் போலிருக்கிறது!!!
ஒரு சமீபத்திய சர்வேயில், பெரும்பாலானோர் மெட்ரோவில் பயணம் செய்வது, பொழுதுபோக்கிற்காகவும் செல்ஃபிக்காகவும் தான்.
அட பக்கிபயலுவளா இதை தெரிஞ்சுக்கிறதுக்கு சர்வே எதுக்கு?
* * * * * * * * *
திகிலூட்டும் கேள்வி!
ஒரு உணவுப்பொருள் காலாவதியானால் என்ன செய்வோம்? தூக்கிப்போடுவோம், இல்லையா !
ஆனால், நாம் வழக்கமாக பொருட்கள் வாங்கும் சூப்பர் மார்க்கெட்-களில் அப்படி செய்யமாட்டார்கள். ரிட்டர்ன் கொடுத்துவிடுவார்கள். எதற்காக என்றெல்லாம் சொல்லமாட்டார்கள். ரிட்டர்ன் ஆன காலாவதியான உணவுப்பொருளை என்ன செய்வார்கள் என்பது உற்பத்தியாளர்களுக்குத்தான் வெளிச்சம்!
அப்புறம், இந்த பதப்படுத்திய உணவுகள்! சைவ அசைவ உணவு எதுவாகயிருந்தாலும் எவ்வளவு நாட்களானாலும் பதப்படுத்தி, பத்திரப்படுத்தி வைக்கமுடியும்.
30 வருடங்களுக்கு முன் பதப்படுத்திய Frozen Chicken-னை சமைத்து ஃப்ரேஷ்-ஆக பரிமாறமுடியும் என்ற உண்மை தெரியுமா உங்களுக்கு?
* * * * * * * * *
காக்காமுட்டை - "எடுத்துக்கிறோம்!" என்பது சரியா?!!
காக்காமுட்டை படத்தில், திருடுவதை "எடுத்துக்கிறோம்" என்று சொல்வது சரியா???!! ரயில் ஃபுட்போர்டில் போகிறவர்களின் செல்போன்களை பறிப்பதும் "எடுத்துக்கொள்வதுதானே"! இப்படியே போனால், பெரிய பெரிய ஸ்கேம்(Scam)களில் மாட்டியவர்களின் மீதும் "பாவம் எடுத்துதானே கொண்டார்கள்" என்று பரிதாபம் உண்டாகிறது!
ஐயகோ என்ன இது ! என் மைன்டு அவனுக்கு ஃபிரெண்டு ஆகிடுச்சே !
* * * * * * *
சங்கதாரா.. புத்தகவிமர்சனமல்ல!!!
கரிகாலன் கொலை பற்றிய சிந்தனைகளை வேறொரு பரிமாணத்திற்க்கு இட்டுச்செல்கின்றது இந்த புதினம். தக்க சான்றுகளுடன் ஒவ்வொரு நிகழ்வுகளையும் குறிப்பிட தவறவில்லை நாவலாசிரியர்.
இருப்பினும், அதி முக்கியமான இறுதி அத்தியாயங்களில் இடம்பெறும் தகவல்களை எங்கிருந்து பெற்றார் என்ற சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை..
மிக முக்கியமாக, ஆதித்யனை கொன்றவரைப் பற்றிய தகவல், இராஜராஜனின் பிறப்பு ரகசியம், உத்தமசோழன் உண்மையில் யார் என்ற விளக்கம், வந்தியத்தேவனின் உண்மையான நோக்கம் என்ன என்பது. சர்ச்சைகளையும் ஐயங்களையும் உருவாக்கும் இந்தப்பகுதிகளில் தான் சான்றுகள் இன்றி எழுதப்பட்டிருக்கிறது.
இந்த மூன்று விஷயங்களுக்கும் விடை தெரிந்தபின், ஒரு நிம்மதியின்மை தோன்றுகிறது. அதற்காகத்தான் கல்கி மறைத்தாரா ???!!!
* * * * * * *
இரண்டும் ஒன்றா?
”கண்ணுக்குள் பொத்திவைப்பேன்.. “
சாருலதாமணி, சாதனா சர்கம் - இவர்களின் குரல்களில் இனிமையான பாடல்! நஸ்ரியாவின் குழந்தைத்தனமான எக்ஸ்பிரஷன்கள் அருமை. வாண்டூஸ்க்கெல்லாம் பிடிக்கிற மாதிரி டான்ஸ் பொம்மைகள் ஆடைகள்!
சாதனா சர்கமே பாடியிருப்பதால் எனக்கு இன்னொரு பாடலும் ஞாபகத்திற்கு வருகிறது. இரண்டும் ஒரே ராகமோ?
“ரகசியமாய்!”
* * * * * * *
நானொரு கவிஞன் ஒரு காலத்திலே!
மாணவர் பிராயத்தில் நிறைய கவிதைகள் எழுதுவேன். சிற்சில பரிசுகள், கல்லூரி காலம் வரை என்னை வளர்ந்து வரும் கவிஞனாக இட்டுச்சென்றன. அதற்குப்பின் ஏனோ தெரியவில்லை 'பற்றாத சட்டையை இழப்பது போல' கவிதை எழுதும் பழக்கம் என்னை விட்டுபோய்விட்டது.
ஏன் என ஆராய்ந்ததில் புரிந்தது - அழகிய மொழியில் ஆங்கில கலக்காமல் சாதாரணமாக எழுதுவதே தரமான கவிதை எழுதும் மகிழ்வை தந்ததாலேயே கவிதை எழுதிவரும் வழக்கத்தை இழந்திருக்கின்றேன்!
ஒரு கவிதை - கீழே (நல்லாயிருக்கா?)
* “கிளையினிலிருந்து
உதிரும்
பூக்களுக்காக
வருந்துவதா..?
அது என்மேல்
உதிர்வதனால்
மகிழ்வதா..?”
* * * * * * *
என்னம்மா இப்படி பண்றீங்களேமா ?
எந்த ஊடகங்களை திறந்தாலும், இயற்கை உணவு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள். 'இதை சாப்பிடலாம், அதை சாப்பிடாதே' என்று ஆளாளுக்கு சொல்கிறார்கள்.
கொஞ்சம் கொஞ்சம் இயற்கை உணவுகளை பின்பற்றவும் தொடங்கிவிட்டார்கள்!
எல்லோரும் இயற்கை உணவுகள் பக்கம் போய்விட்டால் என்ன செய்வது? அதனால் 'அக்கா மாலா' குளிர்பான நிறுவனம் என்ன செய்தார்கள் தெரியுமா ?
'(ஃப்ரெஷ்-ஆன) பழச்சாறுகளில், அதிக கலோரி! தங்கள் குளிர்பானத்தில் குறைவான கலோரிகள்தான் இருப்பதாக' கருத்துகணிப்புகள் சொல்வதாக வரிந்துகட்டிக்கொண்டு அவசர அவசரமாக ஊடகங்களில் வெளியிட்டார்கள்.
இந்த ஒப்பீடே தவறு போல தெரிகிறது! பழச்சாறுகளில் இருக்கும் நன்மை பயக்கும் எந்த வேதிப்பொருட்களும் எந்த குளிர்பானங்களிலும் கிடையாது! அவை வெறும் 'சக்கரை தண்ணி'! ஒரு குளிர்பானத்தை இன்னொரு குளிர்பானத்தொடு வேண்டுமானால் ஒப்பிடலாம்!
சமீபகால விளம்பரங்களில் தங்கள் தயாரிப்புகள் 'ஜெர்மன் ஃபார்மிலா'வை(Formula-வாம்) பின்பற்றுவதாக சொல்கிறார்கள். 'ஜெர்மன் ஃபார்மிலா(?!?!)' - உண்மையா இல்லையா? அந்த ஃபார்முலா தரும் கம்பெனி உண்மையா உப்புமாவா? என்று யார் போய் பார்க்கப்போகிறார்கள்?
நல்ல/அத்தியாவசிய பொருட்கள் எதுவானாலும் பயன்படுத்துவதில் தப்பில்லை என்பது என் கருத்து! ஆனால், டம்பம் அடிக்கும், படிப்பதற்கே கடினமான குட்ட்ட்ட்ட்டி டிஸ்கிளைமர்/வார்னிங் போடும் விளம்பரத் தயாரிப்புகள் மட்டும் கிலியை கிளப்புகிறது!
இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து சாமர்த்தியமாக வெளிவர வெவ்வேறான யுக்திகளை ஹவ்டினி(Harry Houdini 1874 – 1926) கையாண்டார் என்பதை சில சுயமுன்னேற்ற நூல்களில் படித்து வைத்திருந்தேன். அவருடைய உத்திகள் அமானுஷ்யம் என்றும், மேஜிக் என்றும் காலம்காலமாக வேறுவேறு கருத்துக்கள் சொல்லப்பட்டுவருகின்றன. கடினமான சங்கிலிகளால் பிணைத்து, இரும்புப்பெட்டியில் பூட்டிவைத்து தண்ணீருக்குள் அவரை தூக்கியெறிந்துவிடுவார்கள். அனைத்தையும் உடைத்து எறிந்துவிட்டு வெளியே வந்துவிடுவார். மேம்போக்காக பார்த்தால், டிரிக் மாதிரிதான் தெரியும். ஆனால், அவர் ஒரு தேர்ந்த Escape Artist.
புத்தகக்காட்சியில் அவருடைய வாழ்க்கை வரலாறு புத்தகம் கிடைத்தது. பிணையிலிருந்து மீள்வதில் ஒவ்வொரு தரமும் எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார்..! கரணம் தப்பினால் மரணம்! வித்தை ஆரம்பிக்குமுன், அவரிடம் உதவியாளர் ஒரு ஊசியையோ அல்லது சின்ன கத்தியையோ யாரும் அறியாத வண்ணம் கொடுத்துவிடுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்கள். புத்தகத்தை முழுவதும் படித்தபின் மேலும் சில தகவல்கள் பகிர்கின்றேன்..
இரண்டு சூப்பர்ஸ்டார்கள் இணைந்து நடிக்கும்போது, பெரும்பாலும் 'அதான் ஸ்டார்கள் இருக்கிறார்களே, கல்லா கட்டிறலாம்' என்பது போன்ற அலட்சியம் கதையில் இருக்கும். தமிழில் மட்டுமில்லை ஆங்கிலப்படங்களிலும் உதாரணங்கள் உண்டு.
80 களின் சூப்பர்ஸ்டார்களான சில்வஸ்டர் மற்றும் ஆர்னால்ட் இணையும் இந்தப்படமும் அப்படித்தானா?
சில்வஸ்டர் ஒரு Escape expert. ஹவிடினி மாதிரிதான். சிறை அமைப்புகளில் இருக்கும் பாதுகாப்புக்குறைபாடுகளை கண்டறிந்து சொல்வதுதான் அவர் வேலை! இதற்காக, வெவ்வேறு பெயர்களில் கைதிமாதிரி சிறைகளில் தங்கும் நிலைகூட நேர்கிறது.
இவ்வாறு இருக்கும்போது, சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்பு ஒன்றை ஆராய ஒரு பெரிய அசைன்மெண்ட் வருகிறது. சிறைக்கு சென்ற இடத்தில், இவர் இன்னார் என்று தெரிந்தும் நிஜமாகவே சிறைவைக்கப்படுகிறார். அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை.
ரசிகர்கள் ஏமாறாதீர்கள் - Action Portion கம்மி! சில்வஸ்டர் மற்றும் ஆர்னால்ட் வில்லன்களுக்கு ஒரு அடி விட்டால் விழுந்துவிடுவதால் ஆக்ஷனுக்கு அதிக வேலையில்லை. Escaping tricks என்ற சுவாரஸ்யத்தால் எனக்கு இந்தப்படம் பிடித்தது. அவைதான் படத்தில் ஆக்ஷன் காட்சிகளும்!
இறுதிகாட்சியில், சிங்கம் மாதிரி பெரிய கன்-ஐ எடுத்து ஆர்னால்ட் சுடும் காட்சி படு அபாரம்.
நண்பன், 3 இடியட்ஸ் படங்களில், Air Drone என்ற கருவி வரும். அதேமாதிரியான கருவிகளை கொண்டு, அமேசன்.காம் தங்கள் பொருட்களை விநியோகிக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருந்தது. (விஜய், அமீர்கானிடம் அனுமதி வாங்கினீர்களா ??? ;) ) ஆனால், அதை நடைமுறைக்கு கொண்டுவரும் சிக்கல்கள் பற்றி இந்த வீடியோவில் சொல்கிறார்கள்.
ஆக்டோபஸ், ஆரூடம் பார்க்கும் என்றுதான் நாம் தெரிந்துவைத்திருக்கிறோம். ஆனால், அவற்றின் இரு முக்கியமான குணநலன்களுக்கு அறிவியல்மூலம் விடைகாண முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறுகிறார்கள். இந்த கட்டுரையின் முடிவில் ஒருவித வியப்புடன்தான் செல்வீர்கள் என்பதற்கு என்னால் உத்திரவாதம் அளிக்கமுடியும்!
ஆக்டோபஸ்களின் இந்த குணநலன்கள் இதே குடும்பத்தில்(தலைகாலிகள் அல்லது மெல்லுடலிகள் இனம்) உள்ள பிற பிராணிகளான கட்டில் ஃபிஷ் (Cuttlefish) மற்றும் ஸ்க்விட்டுகளுக்கும்(Squid) பொருந்தும்.
அந்த குணநலன்கள் எவை ??
# Camouflage : சமயத்திற்கு/சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன் மேற்தோல் வண்ணத்தை மாற்றிக்கொள்வது(Color/Pattern/Shape Changing): உடல் வண்ணமட்டுமில்லை மேற்தோல் பாறையில் இருந்தால் சொறசொறப்பாகவும், செடியில் இருந்தால் முட்கள் போலவும் மாற்றிக்கொள்கிறது. Shape Changing என்று சொல்லப்படுவது மிமிக் ஆக்டோபஸ் (Mimic octopus) போன்ற அரிதான சில வகை ஆக்டோபஸ்கள் பயன்படுத்தும் உத்தி. இந்த உருமாறும் குணத்தினாலோ என்னவோ, மிமிக் ஆக்டோபஸ் என்று உண்டென்று ரொம்ப சமீபத்தில்தான் தெரிந்திருக்கிறது.(1998 வருடம்).
(நகரும் பாறையிலிருந்து கடல்பாசியாக!!!)
# Intelligence : நுண்ணறிவு : மனிதனுக்கு இணையாகவோ அல்லது அதைவிட அதிகமான(!) நுண்ணறிவைக்கொண்டிருக்கின்றன ஆக்டோபஸ்கள். மனிதன், ஆபத்திலிருந்து தன்னை சமயோசிதமாக தற்காத்துக்கொள்வது மற்றும் தொலைநோக்குப்பார்வையுடன் செயல்படுவது ஆகிய திறன்களை தன் சமூகமாக இயங்கும் வழக்கத்திலிருந்து(Social) அல்லது முன்னோர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறான். ஆனால், இந்தப்பிராணிகள் Non-Social Animals !!! முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் தாய்-தந்தை ஆக்டோபஸ்கள் இறந்துவிடுவதால், தனித்தனியாக வாழ்கின்றன. Cannibals வேறு என்பதால், ஒரு ஆக்டோபஸ் மற்றொரு ஆக்டோபஸிடமிருந்து மறைந்து வாழ்வது இன்றியமையாதது. அவைக்கொண்டிருக்கிற கலர்மாறும் குணமும், நுண்ணறிவும் பரிணாமத்தின் கட்டாயம்.
(நுண்ணறிவு மற்றும் கற்றுக்கொள்ளும் செயல் - சோதனை!!!)
அவற்றின் நுண்ணறிவுக்கான மற்றொரு ஆராய்ச்சியில், இரண்டு கொட்டாங்குச்சிகளை(Coconut Shells) வெவ்வேறு இடத்தில் போட்டுவிடுகிறார்கள். ஆக்டோபஸ் இரண்டையும் ஒரு இடத்திற்கு எடுத்து வருகிறது(Foreseeing & Planning-கின் வெளிப்பாடு). பின் சிப்பிக்குள் அடைபடுவதைபோல தன்னை மூடிக்கொள்கிறது. இந்த தற்காப்பு உத்தியை தானாக சிப்பியிடமிருந்தோ(Shell) ஹெர்மிட் நண்டுகளிடமிருந்தோ(Hermit Crab) கற்றுக்கொள்கின்றன என சொல்லப்படுகிறது.. இதேபோல, மிமிக் வகை ஆக்டோபஸ்கள், பிராணிகள் போலவோ மீன்கள் போலவோ உருமாறுகின்றன. இப்படி இவை எடுக்கும் உருவங்கள் 15க்கும் மேற்பட்டவை. ஒரு பிராணி தாக்கவரும்போது அந்தந்த பிராணிகளின் Predator கள் உருவத்திற்கு தன்னை மாற்றிக்கொள்கிறது.. உதா.திற்கு, டேம்ஷெல்ஃபிஷ்(Damselfish) தன்னைத்தீண்டும்போது, அந்தமீன்களை உணவாகக்கொள்கின்ற(Predator) நீர்ப்பாம்புகள்போல் உருவத்தை மாற்றிக்கொண்டு அவற்றை மி(வி)ரட்டுகின்றன..
இவற்றை அடிப்படையாக வைத்து சில கேள்விகள் :
”கடன்காரப்பய.. எங்க போனான்னே தெரியலயே!!!
1) வண்ணம்மாற்றி தப்பிக்கமுடியும் என்பதை எப்போது யார் இவற்றுக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள்?
2) மிமிக் ஆக்டோபஸ்களிடம் காணப்படுகின்ற சமயோசித உருவமாற்ற நுண்ணறிவை எவ்வாறு பெற்றன?? ஒவ்வொரு பிராணிகளின் Predator-கள் இவையென அவற்றுக்கு எப்படித்தெரிந்தது?
3) இப்பொழுது சொல்லப்போவதைக்கேட்டால் இன்னும் குழப்பமாக இருக்கும்! ஆக்டோபஸ்களுக்கு கண்கள் ஷார்ப். ஆனால், வண்ணங்கள் சுத்தமாக தெரியாது. எவ்வாறு சரியான வண்ணத்திற்கு தன்னை மாற்றிக்கொள்கின்றன? (விஞ்ஞானிகளின் சமீபகால அனுமானம் : ஆக்டோபஸ்களின் மேற்தோல்கள் “பார்க்கின்றன”!!)
உருமாறும் ஏலியன்கள் :
Color மற்றும் Pattern Changing-ல் கட்டில் ஃபிஷ், ஒரு ராஜா!! நம்ம வீட்டு வேலியோர பச்சோந்தியெல்லாம் இவற்றுக்குப்பிறகுதான்..
கோழி ஓடுவதுமாதிரி இரண்டு கால்களால் உருமாறி ஓடிஒளிந்துகொள்ளும் ஒரு வீடியோ :
மேலும் பல வீடியோக்கள் :
கட்டில்ஃபிஷ்-களின் காதல் காலம்(HD) - தற்காப்பு, இணையை கவர்தல், இரையை பிடித்தல் ஆகியபோது மட்டுமில்லாமல் காரணகாரியமின்றி சாதாரண காலங்களில் உற்சாகமாக இருக்கும்போதும் உடல் வண்ணம் மாறுகிறது..
http://www.youtube.com/watch?v=v8Aw7QroV78&feature=relmfu
Maze -ல் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் இரையை சுலப வழிகளில் கண்டறிவது - நுண்ணறிவு சோதனை
http://www.youtube.com/watch?v=bBe2KaRuI80&feature=fvsr
ஒரு கட்டில்ஃபிஷ், சிறிய ஆக்டோபஸ் ஒன்றினை லபக்குகின்றது:
http://www.youtube.com/watch?v=mGMT99i00M4
- ooOoo - ooOoo - ooOoo - ooOoo - ooOoo -
இது என்ன படம்ங்க ???!!!
ஒரு படம் என்னவென்று தெரியவில்லை. நண்பர் சொன்ன கதையைக்கேட்டவுடன் அந்தப்படத்தைப்பார்க்கவோ, அதனைப்பற்றித்தெரிந்துகொள்ளவோ ஆவல் :
’சிறுவனாக இருந்த வயதில் வீட்டைவிட்டு ஓடிப்போகிறான் ஒருத்தன். கடுமையாக உழைக்கிறான். எக்கச்சக்க பணம் சேர்க்கிறது. பல வருடங்களுக்குப்பிறகு, அவ்வளவு பணத்தையும் எடுத்துக்கொண்டு தன் சொந்த ஊருக்கு திரும்புகிறான். தன் வீட்டினரிடம் தான் இன்னார் என வெளிப்படுத்திக்கொள்ளாமல், விருந்தாளி போல தங்குகின்றான். விடிந்ததும் ’தான் யார்’ என்று சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுப்பதுதான் அவன் பிளான். விருந்தாளியாக வந்தவனிடம் ஏகப்பட்ட பணம் இருப்பது அந்த வீட்டிலிருப்பவர்களுக்கு தெரியவருகிறது.. பணத்திற்கு ஆசைப்பட்டு இரவோடு இரவாக அவனை கொலைசெய்துவிடுகிறார்கள் !!! படம் முடிகின்றது..’
- ooOoo - ooOoo - ooOoo - ooOoo - ooOoo -
சினிமா - என்ன?ஏன்?எப்படி? (WWH)
* சந்தரமுகி படத்தில் ஜோதிகாவின் பிரச்சினை - ஆவியா? Split Personality-யா?
* தம்பி ராமையாவின் கஸ்டடியில் மைனாவை அனுப்பவதில் என்ன பிரச்சினை? பிரச்சினை என்று தெரிந்தும் ஏன் இன்ஸ்பெக்டர் தன் வீட்டுக்கு கூட்டிப்போகவேண்டும்?
கல்கி அவர்களின் ’பொன்னியின் செல்வன்’ படித்தவர்களுக்கு தோன்றும் ஒரு பொதுவான கேள்வி - மாவீரனான ஆதித்யன் எவ்வாறு இறந்தான்? மதுரைக்கு சென்றிருந்தபோது துரோகிகளால் பாண்டிய ஆபத்துதவிகளால் கொலைசெய்யப்பட்டது போலத்தான் எழுதியிருப்பார் கல்கி! உண்மையில், சிற்றப்பா உத்தமசோழனின் அதிகாரிகள் தான் இளவரசன் ஆதித்யனை துரோகக்கொலை செய்தார்கள் என்கிறார் ஒரு பதிவர். ஏன் என்பதாக அவர் சொல்லும் எல்லாக்காரணங்களும் தீவிர ஆய்வுக்குரியவை!
ராஜராஜன் மன்னனாக முடிசூட்டிய காலத்திற்கு முன்னர் சுமார் முப்பதாண்டுகாலம் வரலாற்றுக்குறிப்புகள் குழப்பமாக, தெளிவாக இல்லை என்று கூறப்படுகின்றது(வீக்கி). சூழ்ச்சியால் ஆதித்யனின் மறைவு, சுந்தரச்சோழ மன்னர் காஞ்சிபுர அரண்மனையில்
மாளிகைச்சிறை(?!) வைக்கப்பட்டது, உத்தமசோழன் பதவியேற்றுக்கொண்டது, சுந்தரசோழரின் மறைவு... இவற்றுக்குப்பிறகு என்ன ஆயிற்று என்பது தெளிவாக இல்லை.
அந்த சமயங்களில்தான் நடந்ததாக பதிவர் சொல்ல வருவது - (1) ஆதித்யன் கொல்லப்பட்ட சில காலத்திலேயே வந்தியத்தேவனும் உத்தமசோழனின் படையினரால் கொல்லப்பட்டார். (Update: விவாதத்திற்குரிய பொருள்) (2) ஆதித்யன் மற்றும் சுந்தரசோழர் ஆகியோர் மறைவுக்குப்பின், ராஜராஜனும் அவரது
அக்காள் குந்தவை நாச்சியாரும் உத்தமசோழனிடம் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வந்துள்ளார்கள்.(3) குந்தவை வேறொரு மதத்திற்கு மாறியதாக கூறப்படுவது.
குந்தவை நாச்சியார், தான் சார்ந்திருந்த சமயத்தை புறந்தள்ளி வேறொரு சமயத்திற்கு மாறி ’சமயபுர’ட்சி செய்த இடம்மாம் - சமயபுரம் ! ஒரு சமயத்திலிருந்து மற்றொரு சமயத்திற்கு மாறினார் என்று சொல்லியே ஏகப்பட்ட எதிர்ப்புகளை சம்பாதித்துக்கொண்டிருக்கிறார் இந்தப்பதிவர்!!!
இவர் விடுக்கும் தகவல்கள் எந்தளவுக்கு உண்மைத்தன்மை வாய்ந்தது என்பதனை யாராவது நடுநிலைமையான தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தினால் நல்லது.
அதே போல, கல்கியின் பொ.செல்வனிலும் - கண்ணை மூடிக்கொண்டு நம்பாதே! நந்தினியும் ஆழ்வார்க்கடியானும் மட்டும் கற்பனையல்ல.. கதைச்சம்பவங்கள் யாவும் கற்பனையோ என்று எண்ணத்தோன்றுகிறது...
இதனால் படித்த, பார்த்த மற்றும் கேட்டவைகளோடு, கற்ற விஷயங்களும்(!) ஆய்வுக்குரியதாகின்றன..
இந்துஸ்தானி பாடகர் அமரர் ஜெகஜித் என்பவரின் பாடல் இன்ஸ்பிரேஷன் தான் - மேகமே மேகமே! சங்கர்-கணேஷ் அவர்களின் இசையில் வாணி ஜெயராம் அவர்களின் மயக்கும் குரலில் வந்த மேகமே மேகமே கீழே -
சந்தரசேகரிடம் ”எனக்கொரு மலர் மாலை நீ வாங்கவேண்டும்” என்று பாடியபடி திரும்பும்போது, நீங்கள் ஒரு மகிழ்ச்சியை புன்னகையாக வெளிப்படுத்தவேண்டும் என்று டைரக்டர் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். அதற்கு அவர் என்ன செய்கிறார் என்று பாருங்கள் :))
* * * * * * * * * * * * * *
உலகின் பெரிய ஊஞ்சல்
* * * * * * * * * * * * * *
இந்த வார - வீடியோ சர்ஃபிங்:
இவற்றில் ஒரு பாடல், கெளதமின் - நீதானே எந்தன் பொன்வசந்தந்தத்திற்கு, இசைஞானிதான் இசை என்று அறிவிக்கப்பட்டதும் ஒரு எதிர்ப்பார்ப்புடன் பார்த்தது. இந்தப்பாடல்களை எல்லாம் யூட்யூபில் தேடியபோது கிடைத்த மற்றொரு அருமையான பாடல் தான் கடைசிப்பாடல். அந்தக்கால கேத்ரினா கைஃப் - ஆன, ரதியின் உதட்டசைவுகள் வேடிக்கையாக இருக்கும்.